×

அதியமான்கோட்டை ரயில்வே கேட் மேம்பால பணிகளை விரைந்து முடிக்க மக்கள் கோரிக்கை

தர்மபுரி, பிப்.7:  அதியமான்கோட்டை ரயில்வே கேட் மேம்பால பணிகளை விரைந்து முடிக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தர்மபுரி நகருக்குள் அதியமான்கோட்டை, வெண்ணாம்பட்டி, குமாரசாமி பேட்டை, கடகத்தூர் வழியாக ரயில்பாதை செல்கிறது. கடந்த சில மாதங்களுக்கு முன், கடகத்தூர் மற்றும் குமாரசாமிபேட்டை பகுதிகளில் ரயில்வே பாதையில் மேம்பாலம் கட்டும் பணி முடிந்து பயன்பாட்டிற்கு வந்தது. அதியமான்கோட்டை அருகே சேலம் பைபாஸ் சாலையில், ரயில்வே மேம்பாலம் அமைக்கும் பணி கடந்த ஓராண்டுக்கும் மேலாக நடந்து வருகிறது. மந்தமாக நடந்து வரும் இப்பணிகளை விரைவுபடுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இது குறித்து பொதுமக்கள் கூறுகையில், ‘தர்மபுரியில் அதியமான்கோட்டை, வெண்ணாம்பட்டி, குமாரசாமிபேட்டை, கடகத்தூர் ஆகிய 4 இடங்களிலும் ரயில்வே மேம்பாலம் கட்ட வேண்டும் என பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வந்தோம். குமாரசாமிபேட்டை, கடகத்தூர் ஆகிய பகுதிகளில் தற்போது மேம்பாலம் பயன்பாட்டுக்கு வந்த நிலையில், அதிக வாகன போக்குவரத்துள்ள அதியமான்கோட்டை ரயில்வே கேட் மேம்பாலம் கட்டும் பணிகள் மந்தமாக நடந்து வருகிறது. எனவே, இந்த பணிகளை விரைவுபடுத்த வேண்டும்,’ என்றனர்.

Tags : Aayyamkottai Railway Kate Superior ,
× RELATED திரவுபதியம்மன் கோயில் கும்பாபிஷேக பெருவிழா